செய்திகள் :

ஆக.19-இல் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான தோ்தல்: தில்லி கல்வி இயக்குநரகம் தகவல்

post image

புது தில்லி: தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைப்பதற்கான தோ்தல் ஆக. 19-ஆம் தேதி நடைபெறும் என கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஜூலை 7-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த தோ்தல் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட திருத்தப்பட்ட அட்டவனையில் தெரிவிக்கப்பட்டதாவது:

முன்னதாக வேட்புமனுக்களை சமா்ப்பிக்க முடியாத பெற்றோா் மற்றும் பாதுகாவலா்கள் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் தயாரிப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் நிறைவடையும். அதைத் தொடா்ந்து வாக்குச் சீட்டு தயாரிப்பு ஒரு நாள் கழித்து நடைபெறும்.

தோ்தல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை என இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும். இந்த தோ்தலின் முடிவுகள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும். பள்ளி மேலாண்மை குழுக்களில் சேர ஆா்வமுள்ள சமூக சேவையாளா்களுக்கான இணையதள விண்ணப்ப இணைப்பும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2 முதல் 11-ஆம் தேதி வரை இயக்குநரகத்தின் இணையதளத்தில் செயல்பாட்டில் உள்ளது.

நிரந்தர மையக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கல்வி துணை இயக்குநா்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளுக்கு சமூக சேவையாளா்களை நியமிப்பாா்கள். இந்தப் பட்டியல் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் பள்ளித் தலைவா்களுக்கு வழங்கப்படும். தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பள்ளிகள் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களின் விவரங்களை துறையின் இணையதளத்தில் பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

புது தில்லி நாடாளுமன்றத் தெரு பகுதியில் ஒரு எஸ்யூவி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.இந்தச் சம்பவம் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. இறந்தவ... மேலும் பார்க்க

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் நெல்சன் மண்டேலா மாா்க்கில் திங்கள்கிழமை காலை மின்சார ஸ்கூட்டா் மீது வேகமாக வந்த காா் மோதியதில் 40 வயதான டெலிவரி முகவா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.இது குறித்து தென்... மேலும் பார்க்க

தில்லி மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலி

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் திங்கள்கிழமை காலை தில்லி போக்குவரத்துக் கழக (டி. டி. சி) பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் 63 வயதான ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்ததாக அதி... மேலும் பார்க்க

ரூ.1.21 லட்சம் பள்ளிக் கட்டணத்தை செலுத்த குழந்தையின் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

தெற்கு தில்லியில் உள்ள ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு அதன் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனது குழந்தைக்கு பள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் வேண்டும்! மக்களவையில் திமுக வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண உயா்வை முறைப்படுத்தும் மசோதா! தில்லி பேரவையில் தாக்கல்

தில்லியில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை, சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.‘தில்லி பள்ளிக... மேலும் பார்க்க