செய்திகள் :

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

post image

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.

மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட 300 நாள்கள் வரை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள தக்லிமகன் பாலைவனத்தின் மையப் பகுதியில் பூமியின் பரிமாணம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கு ’ஷெண்டிடேக் 1’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக மிக அழமான கிணற்றை தோண்டும் பணியை சீன தேசிய பெட்ரோலியக் கழகம் கடந்த 2023 மே 30-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், 580 நாள்கள் நீடித்த கிணறு தோண்டும் பணியானது நிறைவுற்றதாக சீன அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை தோண்டுவதற்கு 580 நாள்கள் எடுத்துக் கொண்டதாகவும், இதன் ஆழம் 10,910 மீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12,000 அடி வரை துளையிடும் கருவி பயன்படுத்தப்பட்டதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது ஆழமான கிணறாகும்.

ரஷ்யாவின் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் எஸ்ஜி-3 என்ற கிணறு, கடந்த 1989ஆம் ஆண்டு தோண்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 12,262 மீட்டர் ஆழமுடைய இந்த கிணறு, உலகில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான கிணறாக இருக்கிறது.

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்க... மேலும் பார்க்க