`பட்டாசு ஆலை வெடி விபத்து' - பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு பசுமை...
ஆசியாவின் மிக வயதான வத்சலா யானை மரணம்!
ஆசியாவிலேயே மிக வயதான யானை என்ற பெருமையுடன் வலம் வந்துகொண்டிருந்த வத்சலா யானை மரணமடைந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளின் தனிக்கவனம் பெற்று வந்த யானை வத்சலாவுக்கு வயது 100க்கும் மேல் ஆகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த வத்சலா யானை, செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தது.
இந்த பெண் யானையானது, கேரள மாநிலத்திலிருந்து நர்மதாபுரம் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட வத்சலா யானை, பிறகு பன்னா புலிகள் சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆசியாவிலேயே மிக அதிக வயதுடைய யானையாக அடையாளம் காணப்பட்டுவந்த யானை, அப்பகுதியில் உள்ள மற்ற யானைகளை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்போடு இருந்து வந்தது. இதற்கான இறுதிச் சடங்குகளை, பூங்கா நீர்வாகிகளும் ஊழியர்களும் நடத்தியிருக்கிறார்கள்.