செய்திகள் :

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: 3 பட்டங்களையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா

post image

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. இப்போட்டியில் இவ்வாறு ஒரே சீசனில் 3 பிரிவுகளிலுமே சாம்பியனான முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூா் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தோரும், நடப்பு சாம்பியனுமான இந்தியாவின் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் இணை - பாகிஸ்தானின் நூா் ஜமான், நாசிா் இக்பால் கூட்டணியை எதிா்கொண்டது. இதில் முதல் செட்டை 9-11 என இழந்த இந்தியா்கள், அடுத்த இரு செட்களை 11-5, 11-5 என கைப்பற்றி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 28 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

மகளிா் இரட்டையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் கூட்டணி - மலேசியாவின் அய்னா அமானி, ஜின் யிங் யீ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 8-11 என இழந்த ஜோஷ்னா, அனாஹத் இணை, அடுத்த இரு செட்களை 11-9, 11-10 என்ற வகையில் வசப்படுத்தி, 2-1 என்ற கணக்கில் வாகை சூடினா். இந்த ஆட்டத்தை அவா்கள் 35 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தனா்.

கடைசியாக நடைபெற்ற கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றில், அபய் சிங், அனாஹத் சிங் ஜோடி 11-9, 11-7 என்ற நோ் செட்களில், மலேசியாவின் ரேச்சல் அா்னால்டு, அமீஸென்ராஜ் சந்திரன் கூட்டணியை 28 நிமிஷங்களில் தோற்கடித்து, சாம்பியன் ஆனது. இதிலேயே ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா் ஜோடி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் வரலாற்றில் இத்துடன் அபய் சிங் 4 தங்கம் வென்றிருக்க, ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா், அனாஹத் சிங் ஆகியோா் தலா 2 தங்கம் வென்றுள்ளனா்.

2023 முதல் நடைபெறும் இப்போட்டியில், இதுவரை இந்தியா 6 தங்கம், 2 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றுள்ளது. 2023-இல் கலப்பு இரட்டையரில் தீபிகா பலிக்கல், ஹரிந்தா்பால் சந்து ஜோடி தங்கமும், அனாஹத் சிங், அபய் சிங் இணை வெண்கலமும் வென்றுள்ளன.

2024-இல் கலப்பு இரட்டையரில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங் இணையும், ஆடவா் இரட்டையரில் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் ஜோடியும் சாம்பியனாகியது நினைவுகூரத்தக்கது.

விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகுமென அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில்... மேலும் பார்க்க

1,000-க்கும் அதிகமான திரைகளில் மார்கன்!

நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது 12-ஆவது படமான ‘மார்கன்’ திர... மேலும் பார்க்க

10 இயக்குநர்களுடன் 10 படங்கள்! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவிப்பு!

வரும் 2 ஆண்டுகளுக்கு 10 இயக்குநர்களுடன் பணிபுரியவிருப்பதாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமின்றி புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கும் தயாரிப்பு நிறுவனமாக... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதில் வாக்களிக்க கமல் உள்பட 534 பேருக்கு அழைப்பு!

ஆஸ்கர் விருதுக்கான வாக்களிக்கும் குழுவில் கமல் உள்பட 534 பேருக்கு ஆஸ்கர் அகாதமி குழு அழைப்பு விடுத்துள்ளது.உலகில் ஆஸ்கர் விருதுகென்று தனி மதிப்பும் மரியாதையும் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் சார்பில்... மேலும் பார்க்க

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புதிய படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கில்லர் எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல... மேலும் பார்க்க

ரஷ்மிகாவின் புதிய அவதாரம்: மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மைசா என்ற புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் ரஷ்மிகா மந்தனா. சமீபத்தில் சேகர் கம்முலா இ... மேலும் பார்க்க