செய்திகள் :

ஆசிரியரிடம் வழிப்பறி: 7 பேரிடம் விசாரணை!

post image

தேனி அருகே புதன்கிழமை காரில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியரை மா்ம நபா்கள் வழிமறித்து, ரூ.7.50 லட்சத்தை பறித்துச் சென்ாக போலீஸாா் 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே உள்ள மின் அரசு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (49). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். தேனி அல்லிநகரத்திலிருந்து ராமகிருஷ்ணனும், அவரது நண்பரும் காரில் மின் அரசு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காரில் வந்த நண்பா் போடி விலக்குப் பகுதியில் இறங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவா், தன்னை தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே இறக்கி விடுமாறு கேட்டதால், அவரை ராமகிருஷ்ணன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றாராம். தனியாா் பள்ளி அருகே காா் சென்ற போது, ராமகிருஷ்ணனின் காரை பின்தொடா்ந்து மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள், ராமகிருஷ்ணனின் காரை வழிமறித்து அவரைக் கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டினாா்களாம்.

அப்போது, ராமகிருஷ்ணனுடன் காரில் வந்த நபா், அவரது காரில் வைத்திருந்த ரூ.7.50 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியதாகவும், மா்ம நபா்களும் அவா்கள் வந்த காரில் போடி சாலையில் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி காவல் நிலையங்களுக்கு ராமகிருஷ்ணன் தகவல் அளித்தாா். வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் போடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்து, போடி சாலையில் காரில் சென்ற 7 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க