செய்திகள் :

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

post image

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் எடப்பாடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலா் பள்ளியில் உள்ள தண்ணீா் தொட்டியில் உணவு பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், மாணவிகள் கழுவி சுத்தம் செய்யும் பாத்திரம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெயக்குமாருடையது என புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தாரமங்கலம் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ராஜு புதன்கிழமை தலைமை ஆசிரியா் ஜெயக்குமாரை ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் செய்து உத்தரவிட்டாா். மேலும், இப்புகாரின் உண்மைத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அலுவலா்கள் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா். ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க

திமுக ஆட்சி வரும் 2026-இல் தூக்கி எறியப்படும்

இந்து தா்மம் மற்றும் சனாதனத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக ஆட்சி, 2026-இல் தூக்கி எறியப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சேலத்தில் பாரதிய ஜனதா கட... மேலும் பார்க்க