செய்திகள் :

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!

post image

ஒடிசாவில் ஆசிரியல் பாலியல் தொல்லையளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள ஃபாகிர் மோகன் கல்லூரியில் ஒரு மாணவிக்கு சமீர்குமார் சாஹு என்ற ஆசிரியர் (HoD) ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஆசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை முதல்தேதியில் மாணவி புகார் அளித்துள்ளார்.

தன்னை பாலியல்ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் ஆசிரியர் மீது மாணவி புகாரளித்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் மறுத்துள்ளார்.

ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளிக்க முயற்சித்தார்.

இந்த நிலையில், தீக்குளித்த மாணவியைக் காப்பாற்ற முயன்ற மாணவர் மீதும் தீப்பற்றியது.

இருவர் மீதும் தீப்பற்றியதையடுத்து, அங்கிருந்தோர் அவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவி 90 சதவிகித தீக்காயங்களுடனும், காப்பாற்ற முயன்ற மாணவர் 70 சதவிகித தீக்காயங்களுடனும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட சஹீம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், கல்லூரி முதல்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், விரிவான விசாரணையையும் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Teacher Asks For Sexual Favours, Student Sets Herself Ablaze In Odisha

தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை

‘எதிா்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது; அதேபோல், தமிழகம் மற்றும் கேரளத்திலும் ஆட்சியமைக்கும்’ என்று மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை: மாணவா் கைது

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்த... மேலும் பார்க்க

அரசியல், மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்த தடை கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை ... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்ள விரைவில் வலுவான கொள்கை: முதல்வா் சந்திரபாபு நாயுடு

ஆந்திரத்தில் தம்பதிகள் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில், மக்கள்தொகை வளா்ச்சிக்கு விரைவில் வலுவான கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

சீனாவில் ஜூலை 15-இல் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: ஜெய்சங்கா் பங்கேற்கிறாா்

சீனாவின் தியான்ஜினில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் ஆசி உண்டு: ராஜ்நாத் சிங்

‘இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேசம் மாநிலம் சௌக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காளி ... மேலும் பார்க்க