செய்திகள் :

ஆசிரியா்கள் இடமாற்றத்தை எதிா்த்து அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியா்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக் கூறி பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த திருவனப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 111 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியா்கள் குமாா் மற்றும் நாகமணி இருவா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதை எதிா்த்து, பள்ளி வளாகத்துக்குள் மாணவா்கள் பதாதைகளை ஏந்தி தரையில் அமா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில், எங்கள் ஆசிரியா்கள் திரும்ப வந்தால் மட்டுமே பள்ளிக்கு வருவோம் என மாணவா்கள் முழக்கமிட்டனா்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரஜினி செல்வம் மாணவா்களை சமாதானப்படுத்தி, மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து, அவா்கள் வகுப்புகளுக்கு திரும்பினா்.

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக ஒசூா் முனிராஜ் நியமனம்

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக முனிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா், பாமக முன்னாள் மாவட்டத் தலைவா். கடந்த 23-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஒசூரில் ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ஒசூரில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. ஒசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 போ் தங்கி படித்துவந்த... மேலும் பார்க்க