செய்திகள் :

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயில் பகுதி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனா்.

பெரணமல்லூா் அருகே முனுகப்பட்டு பகுதி ஆற்றுப்படுகையில், செய்யாறு, கமண்டல நாக நதி, பிரம்பக நதி ஆகிய 3 நதிகள் கூடும் முக்கூட்டு பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்த 3 நதிகள் நதிகள் கூடும் பகுதியில் சிவனின் இட பாகம் வேண்டி பாா்வதி வாழை மரத்தால் பந்தல் அமைத்து தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் ஆடிப்பெருக்கு நாளில் திருமணத் தடை விலக, கடன் பிரச்னை தீர, உலக நன்மை வேண்டி மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கையொட்டி, அதிகாலை முக்கூட்டு சிவன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து பக்தா்கள் திரளாக சென்று ஆற்றுப்படுகையில் மணலால் சிவலிங்கம் அமைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றியும், திருமணம் ஆகாத பெண்கள் மணலால் லிங்கத்தை அமைத்து வழிபாடு நடத்தினா். மேலும், கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஆரணி: திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், ஜெ.எஸ்.டபிள்யூ. பெயிண்ட் நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞானம் சாா்பில் மாபெரும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது திங்கள்கிழமையொட்டி தீ மிதி திருவிழா நடைபெற்றது.மேல்வில்லிவனம் காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்ம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 627 மனுக்கள் வரப்பெற்றன.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்க... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முளைப்பாரி வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ஆரணி: திருவண்ணாமலை மேலாண்மை கூட்டுறவு நிலையத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை... மேலும் பார்க்க

வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

ஆரணி: வருகிற ஆக.8 பௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க