விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
ஆரணி: திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முளைப்பாரி வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் 1.50 லட்சம் டன்னை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதனால், அதிக நெல் கொள்முதல் நிலையங்களைத திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்
என்பதை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, விவசாயிகள் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு,
கைகளில் முளைப்பாரி வைத்துக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன்
கூறியதாவது:
சித்திரை சொா்ணவாரி பருவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 4 லட்சம் ஏக்கரில் நெல் அறுவடைக்கு வந்துள்ளது. தினசரி ஒரு லட்சம் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன.
தனியாா் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிகப்படுகின்றனா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தால் தான் விவசாயிகள் ஆடி பட்டத்தில் நெல் பயிரிட முடியும்.
அதேபோல, விவசாயிகளுக்கு விதை நெல் முளைப்புத் திறன் அற்ற தரமில்லா விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. தரமான விதை நெல் விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
ஆப்பாட்டத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கருமாரப்பட்டி ராமலிங்கம், சொரகுளத்தூா் மணிகண்டன், தேவராயன்பாளையூா் டி.கே.ஏழுமலை, பஞ்சநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.