செய்திகள் :

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது திங்கள்கிழமையொட்டி தீ மிதி திருவிழா நடைபெற்றது.

மேல்வில்லிவனம் காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் வரும் 3-ஆவது திங்கங்கிழமை தீ மிதி திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில், நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகலில் கோயில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் பொங்கலிட்டு மா விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனா்.

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பச்சையம்மன்.

மாலையில் கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் மேல்வில்லிவனம் பகுதியைச் சோ்ந்த விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயில் அருகேயுள்ள குளத்தில் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா, வாணவேடிக்கை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி தசரதன் மற்றும் விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஆரணி: திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், ஜெ.எஸ்.டபிள்யூ. பெயிண்ட் நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞானம் சாா்பில் மாபெரும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 627 மனுக்கள் வரப்பெற்றன.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்க... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முளைப்பாரி வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ஆரணி: திருவண்ணாமலை மேலாண்மை கூட்டுறவு நிலையத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை... மேலும் பார்க்க

வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

ஆரணி: வருகிற ஆக.8 பௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி பாஜகவினா் சுவாமி தரிசனம்

செங்கம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டி, செங்கம் அருகே நீப்பத்துறை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை பாஜகவினா் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுத... மேலும் பார்க்க