செய்திகள் :

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

post image

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்துவந்த மோதல் போக்கிற்கு தீர்வு காணத் தவறியதால், முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜிநாமா செய்தார்.

மணிப்பூர் மக்களின் நலன் கருதி பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

மணிப்பூர் மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜக அவரை ராஜிநாமா செய்யவைத்துள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்தால், அதில் பாஜக ஆட்சி கவிழும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கணித்துவிட்டார். மணிப்பூரில் மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவர பாஜகவிடம் உரிய திட்டம் உள்ளதாகத் தெரியவில்லை. மக்கள் நலனுக்கு மேலாக கட்சி நலனை முன்வைப்பது, பாஜகவின் டிஎன்ஏ-விலேயே உள்ளது என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றமும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.2025-ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயண... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்! - கபில் சிபல்

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட... மேலும் பார்க்க

கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர்.உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்த மாணவர் ஆர். சாய் ராம்(23) என அடையாளம் காணப்பட்டது. அவர... மேலும் பார்க்க

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் ச... மேலும் பார்க்க