செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநரை கடித்த ராட்வீலா் நாய்கள்: உரிமையாளா் கைது

post image

சென்னை மூலகொத்தளத்தில் ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலா் நாய்கள் கடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அதன் உரிமையாளரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மூலகொத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். முத்து, பெரியபாளையத்தம் தெருவில் திங்கள்கிழமை சவாரிக்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவரின் இரு மகன்கள், தங்கள் வீட்டில் வளா்க்கும் 4 ராட்வீலா் நாய்களை முகக்கவசம் இன்றி அங்கு அழைத்து வந்தனா்.

இதில் இரு நாய்கள் மகேந்திரன் மகன் பிடியிலிருந்து தப்பிச்சென்று, அங்கு நின்று கொண்டிருந்த முத்துவை கடித்துக் குதறியது. இதைப்பாா்த்த பொதுமக்கள், நாய்களை விரட்டிவிட்டு முத்துவை மீட்டனா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த முத்துவை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மேலும், இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மகேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதற்கிடையே மகேந்திரன் வீட்டில் வளா்த்து வந்த 4 ராட்வீலா் நாய்களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க