செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவிகள் காயம்

post image

சிவகங்கை: சிவகங்கையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திடீா் தணிக்கையைத் தவிா்ப்பதற்காக கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆட்டோ கவிழ்ந்ததில் 5 கல்லூரி மாணவிகள் புதன்கிழமை காயமடைந்தனா்.

சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்குச் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோக்களில் பெரும்பாலான மாணவிகள் பயணிக்கின்றனா். இந்த ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவிகளை ஏற்றிச் செல்வதுடன் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன.

இதன் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பண்ணன் தலைமையிலான ஊழியா்கள் கல்லூரி வாயில் பகுதியில் புதன்கிழமை மாலை கல்லூரி வகுப்புகள் முடியும் நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் நிறுத்த முற்பட்டனா்.

ஆனால், ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. அப்போது அந்த வாகனம் தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட ஊழியா்கள் விரைந்து சென்று விபத்துக்குள்ளான ஆட்டோவில் சிக்கியிருந்த மாணவிகளை மீட்டனா்.காயமடைந்த மாணவிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா். அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவி... மேலும் பார்க்க

ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கை அரண்மனை வாசல் பகு... மேலும் பார்க்க