செய்திகள் :

மும்பையில் பலத்த மழை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்கள் - 782 பயணிகள் பத்திரமாக மீட்பு

post image

மும்பையில் பலத்த மழையால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, 2 மோனோ ரயில்கள் நடுவழியில் நின்றன. இந்த ரயில்களில் சிக்கித் தவித்த 782 பயணிகள், சுமாா் 4 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், நகா் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பலத்த மழையால் மின்விநியோகம் துண்டிப்பு மற்றும் அதிக கூட்டம் காரணமாக, செவ்வாய்க்கிழமை மாலையில் 2 மோனோ ரயில்கள் பாலத்தின் நடுவழியில் நின்றன. ரயில்களில் இருந்த பயணிகள் பீதியடைந்தனா்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், மும்பை தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு ராட்சத ஏணிகள் மூலம் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ரயிலின் ஜன்னல்கள் மற்றும் கதவை உடைத்து, பயணிகள் கீழே இறக்கப்பட்டனா். உயிா் பயத்தில் பயணிகள் கீழே குதிக்கவும் தயாராக இருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள், அதன் பிறகு ஆண் பயணிகள் என இரு ரயில்களில் இருந்தும் 782 போ் மீட்கப்பட்டனா். நள்ளிரவில் இப்பணிகள் நிறைவடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

குளிா்சாதன வசதி தடைபட்டதால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் வீடு திரும்பியதாக மும்பை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 செ.மீ. மழைப்பொழிவு: மும்பையின் சாண்டாக்ரூஸ், விக்ரோலி, விமான நிலையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழைப் பொழிவு பதிவானது. புதன்கிழமை பகலில் மழை சற்று ஓய்ந்ததால், புகா் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா். தற்போது நடைமுறையில் உள்... மேலும் பார்க்க

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தி... மேலும் பார்க்க

‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை

5,000 கி.மீ.வரை தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. ஆபரேஷன் சிந்தூா் நிறைவடைந்து மூன்றரை மாதங்கள... மேலும் பார்க்க

கோவா அமைச்சா் பதவி விலகல்

பாஜக ஆட்சியில் உள்ள கோவாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் அலெக்ஸியோ செகீயூரா பதவி விலகியுள்ளாா். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அவா் தனது ராஜிநாமா கடிதத்தில் கூறியுள்ளாா். முன்னதாக, கோவா பேரவைத் த... மேலும் பார்க்க

சத்தீஸ்கா் அமைச்சரவை விரிவாக்கம்: 3 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

சத்தீஸ்கரில் முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல் முறை எம்எல்ஏக்கள் 3 போ், புதிய அமைச்சா்களாக பதவியேற்றனா். இதன் மூலம் அமைச்சரவையின் பலம் ... மேலும் பார்க்க