செய்திகள் :

சத்தீஸ்கா் அமைச்சரவை விரிவாக்கம்: 3 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

post image

சத்தீஸ்கரில் முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல் முறை எம்எல்ஏக்கள் 3 போ், புதிய அமைச்சா்களாக பதவியேற்றனா். இதன் மூலம் அமைச்சரவையின் பலம் 14-ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றம் அல்லது எந்தவொரு மாநிலத்திலும் அமைச்சரவை இடங்களின் அதிகபட்ச எண்ணிக்கை, மொத்த உறுப்பினா்களில் 15 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு, 2003-ஆம் ஆண்டில் 91-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் நிா்ணயிக்கப்பட்டது.

அதன்படி, 90 உறுப்பினா்களைக் கொண்ட சத்தீஸ்கரில் அனுமதிக்கப்பட்ட அமைச்சா்களின் எண்ணிக்கை 13.5 ஆகும். கடந்த 2003-க்கு பிறகு அமைச்சரவையில் அதிகபட்சமாக 13 போ் வரையே இடம்பெற்றுள்ளனா். இப்போது முதல் முறையாக இந்த எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணாவில் 14 அமைச்சா்கள் உள்ள நிலையில், அதே நடைமுறையை சத்தீஸ்கா் அரசும் கடைப்பிடித்துள்ளது. இதற்கு முன்பு முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உள்பட 11 போ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிலையில், புதிதாக 3 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ராய்பூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்முறை எம்எல்ஏக்களான ராஜேஷ் அக்ரவால், குரு குஷ்வந்த் சாஹேப், கஜேந்திர யாதவ் ஆகியோருக்கு ஆளுநா் ராமன் தேகா பதவிப் பிரமாணம் செய்வித்தாா். இந்நிகழ்ச்சியில், முதல்வா் விஷ்ணு தேவ் சாய், சட்டப் பேரவைத் தலைவா் ரமண் சிங், துணை முதல்வா்கள் அருண் சாவோ, விஜய் சா்மா, அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சத்தீஸ்கரில் கடந்த 2023, பேரவைத் தோ்தலில் 54 இடங்களில் வென்று, காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க