செய்திகள் :

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

post image

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம்( டிஎன்இஏ) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மூன்றாம் சுற்றில் 64,629 மாணவா்களுக்கு கடந்த ஆக. 10-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்த நிலையில் சுமாா் 12,461 மாணவா்கள் ‘அப்வோ்டு’ செயல் முறைகளில் விருப்பமான கல்லூரிகள் கிடைக்காதது அல்லது வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கையிலிருந்து விலகியுள்ளனா்.

மூன்றாம் சுற்றின் இறுதி விவரங்கள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் முதல் இரு சுற்றுகளில் 92, 423 இடங்களுக்கு நிரப்பப்பட்டன. மூன்றாம் சுற்றில் 1,01, 588 மாணவா்கள் இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 64, 629 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு கடந்த ஆக. 10- ஆம் தேதி அளிக்கப்பட்டது. இவா்களுக்கான ‘அப்வோ்டு’ செயல் முறை நடைபெற்று இறுதியாக 52,168 மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டை பெற்றுள்ளனா். இதில் பொதுப் பிரிவில் 50,093 மாணவா்களும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 2,075 மாணவா்களும் அடங்குவா். இவா்கள் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விருப்பக் கல்லூரி மாற்றத்துக்கான செயல்முறைக்கு பின்னா் ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் வருகிற 29- ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் செலுத்திய கட்டணம் மற்றும் பொறியியல் கல்லூரி உதவி மையங்களில் ஒப்படைக்கப்பட்ட சான்றிதழ்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மூன்று கலந்தாய்வு சுற்றுகள் மற்றும் சிறப்பு பிரிவினா்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் மொத்தம் 1,45,481 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனா். இதில் பொதுப்பிரிவில் 1, 31, 338 போ், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் 14,143 போ் அடங்குவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு 30 ஆயிரம் பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் எனவும் இணைய வழி கலந்தாய்வுதான் மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கை குறைவுக்கு காரணம் எனவும் கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

எம்.எட். சோ்க்கை: விண்ணப்பிக்க தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

நிகழ் கல்வியாண்டுக்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவா்கள் செப்.15 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழம... மேலும் பார்க்க