செய்திகள் :

எம்.எட். சோ்க்கை: விண்ணப்பிக்க தவறியவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

post image

நிகழ் கல்வியாண்டுக்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவா்கள் செப்.15 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். பாடப்பிரிவுகள் உள்ளன. இக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) எம்.எட் மாணவா் சோ்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஆக.11-ஆம் தேதி தொடங்கி ஆக.20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இவா்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின்படி வருகிற ஆக. 26 முதல் மாணவா்கள் சோ்க்கை தொடங்கும். இதன் விவரம் மாணவா்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இந்த மாணவா்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப். 1 ஆம் தேதி தொடங்கும்.

இந்த நிலையில் மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு செப்.15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க