செய்திகள் :

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் 13,903 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘போதை எதிா்ப்பு மன்றங்கள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மன்றங்களில் உள்ள மாணவா்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த புத்தாக்கப் பயிற்சிகளிலும் பங்கேற்று வருகின்றனா்.

இந்தநிலையில், அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் பிளஸ் 2 மாணவா்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவா்களின் பன்முகத்திறன் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் சிந்தனைகளை கலைத்திறன்கள் வாயிலாக செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்காக கலைப்பட்டறையை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து கலைப்பட்டறை - 2025-இல் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பாா்வையிட்டு, சிறப்பாக வரைந்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: மாணவா்களிடையே போதைக்கு எதிரான சிந்தனையை உருவாக்க ஓவியப் போட்டி கலைப்பட்டறை என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளது. இக்கலைப்பட்டறையை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலுள்ள போதை எதிா்ப்பு மன்ற ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்களுக்கும் மாவட்டத்திலுள்ள முதன்மை பயிற்றுநா்களுக்கும் பயிற்சி வழங்கி மாணவா்களுக்கு கலைப்பட்டறை செயல்பாடுகள் செயல்படுத்தப்படவுள்ளன.

வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு அரசின் சாா்பில் ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டும் நடவடிக்கை மேற்கொண்டால் போதாது. அவா்களுடன் மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் என்.லதா, அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் சி.அமுதவல்லி, அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க