ஆட்டோ, சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் ஆட்டோ, சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
மூன்றாந்தல் தேவாலயம் அருகே தேனிக்கு செல்லும் பேருந்து நிறுத்தமும், மூன்றாந்தல் தெற்குப் புதுத்தெரு பிரிவு அருகே திண்டுக்கல் செல்லும் பேருந்து நிறுத்தமும் உள்ளன. தேனிக்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றனா்.
இதனால், தேனிக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்த இடம் இல்லாததால் சாலையின் மையத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு சென்று வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல, மூன்றாந்தல் கடைவீதி நுழைவு வாயிலில் ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்வதால், இந்த இடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஹிந்துஸ்தான் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை இறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.