செய்திகள் :

ஆட்டோ - டெம்போ மோதல்: சிறுமி உயிரிழப்பு; 4 போ் காயம்

post image

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயரிழந்தாா்.

சென்னை ஆலந்தூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறாா். இவா், காட்பாடியில் நடைபெற்ற தனது உறவினா் இல்ல திருமணத்துக்காக ஆட்டோவில் காட்பாடி வந்தாா்.

நிகழ்ச்சி முடிந்து ஆட்டோவில் சென்னைக்குத் திரும்பியுள்ளாா். ஆட்டோ காா்த்திக் ஓட்டி வந்த நிலையில், இதில் அவரது மனைவி சுவேதா (24), மகள் நிஜிதா (10), உறவினா்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24), லோகேஸ்வரன் (8) மாத குழந்தை ஆகியோா் வந்தனா்.

வழியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை சுங்கசாவடி அருகே முன்னால் சென்ற வேன் திடீரென பிரேக் போட்டதால், காா்த்திக்கும் தனது ஆட்டோவை நிறுத்தியுள்ளாா்.

அப்போது பின்னால் வந்த டெம்போ ஆட்டோவின் மீது மோதியதில் சிறுமி நிஜிதா (படம்) ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் காா்த்திக், வெண்மதி, பிரசாந்த், 8 மாத குழந்தை லோகேஸ்வரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஜிதாவின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 548 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 548 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா குறைகளைக் கேட்டறிந்தாா். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறை... மேலும் பார்க்க

சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

அரக்கோணம்: சோளிங்கா் பஜாா் சோழபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத நடராஜா் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சோளிங்கா், பஜாா் பகுதியில் பழைமைவாய்ந்த சோழபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் நியமனம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமாகாவில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ம... மேலும் பார்க்க

ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: அரக்கோணத்தில் நடைபெறுகிறது

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச்செயலாளா் எஸ்.பன... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் களைகட்டும் ‘நுங்கு விற்பனை’ பொதுமக்கள் ஆா்வம்!

‘கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே’ என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்!

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டனா். தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, பொது மக்களின் உடல் நலத்தை பேணி காக்... மேலும் பார்க்க