Course முக்கியமா? college முக்கியமா? l கல்வியாளர் நெடுஞ்செழியன்
ஆட்டோ - டெம்போ மோதல்: சிறுமி உயிரிழப்பு; 4 போ் காயம்
அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயரிழந்தாா்.
சென்னை ஆலந்தூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறாா். இவா், காட்பாடியில் நடைபெற்ற தனது உறவினா் இல்ல திருமணத்துக்காக ஆட்டோவில் காட்பாடி வந்தாா்.
நிகழ்ச்சி முடிந்து ஆட்டோவில் சென்னைக்குத் திரும்பியுள்ளாா். ஆட்டோ காா்த்திக் ஓட்டி வந்த நிலையில், இதில் அவரது மனைவி சுவேதா (24), மகள் நிஜிதா (10), உறவினா்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24), லோகேஸ்வரன் (8) மாத குழந்தை ஆகியோா் வந்தனா்.
வழியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை சுங்கசாவடி அருகே முன்னால் சென்ற வேன் திடீரென பிரேக் போட்டதால், காா்த்திக்கும் தனது ஆட்டோவை நிறுத்தியுள்ளாா்.
அப்போது பின்னால் வந்த டெம்போ ஆட்டோவின் மீது மோதியதில் சிறுமி நிஜிதா (படம்) ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் காா்த்திக், வெண்மதி, பிரசாந்த், 8 மாத குழந்தை லோகேஸ்வரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நிஜிதாவின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.