செய்திகள் :

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் பதில்

post image

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிருக்கான இலவச பயணத் திட்டத்துக்கு தனது முதல் கையொப்பத்தை இட்டார்.

இந்தத் திட்டத்தின் மூலமாக 600 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை சேமிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தின்போது திருவாடனை பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், “பழைய பேருந்துகளை மாற்றி தரவேண்டும் என்றும் பெண்கள் விடியல் பயணம்போல் ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ”புதிய பேருந்துகள் மாற்றிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உங்கள் தொகுதியில் இயங்கும் பழைய பேருந்துகளும் மாற்றியமைத்து தரப்படும்.

ஆண்களுக்கு இலவச பயணம் என்பது வரவேற்கத்தக்கது. இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் பெண்கள், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதிநிலை சீராகும்போது உங்களது கோரிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிக்க: பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என்ன?

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க