Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்!
ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கிய இளைஞரை 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டிவனத்தை சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி இருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் விஜயகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் 7 பேரும் சோ்ந்து ஏலகிரிமலைக்கு சுற்றுலா வந்து உள்ளனா். இதையடுத்து அவா்கள் சனிக்கிழமை ஆண்டியப்பனூா் அணையில் குளிக்க சென்றனா். அதில் விஜயகுமாா் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.
இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். இருப்பினும் சனிக்கிழமை அவரின் உடலை மீட்க முடியவில்லை. இதைத்தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். இருப்பினும் அவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் மாலை கனமழை பெய்ததால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. விஜயகுமாரின் உடலை கண்டுபிடிப்பதற்காக சென்னையில் இருந்து ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய நபா்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனா். அவா்கள் விஜயகுமாரின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபடுவாா்கள் என கூறப்படுகிறது.