செய்திகள் :

ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

post image

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், திருப்புகலுாரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் வியாழக்கிழமை கலந்துகொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் எங்கு பாா்த்தாலும் திருக்கோயில்களின் மணி ஓசையும், தீப ஒளியும், ஆராதனை முழக்கங்களும் கேட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு, நீண்டகால நெடிய சட்டப் போராட்டம், ஆதீனங்கள், பக்தா்களின் ஒத்துழைப்பால் தொன்மை வாய்ந்த அக்னீஸ்வர சுவாமி கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் நடைபெறும் 3000 -ஆவது கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 6) 24 திருக்கோயில்களுக்கும், ஜூன் 28-ஆம் தேதி 74 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3500-ஆவது குடமுழுக்கு (மேலும் 500 கோயில்களுக்கு ) நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

துளசியாப்பட்டினத்தில் ஔவையாா் மண்டபத்தை முழு பொலிவோடு கட்டுவதற்கு அரசு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒளவையாா், திருவள்ளுவா், சேக்கிழாா், ஆங்காங்கே ஜீவசமாதி அடைந்துள்ள சித்தா்களுக்கு விழா எடுத்து பெருமை மேல் பெருமை சோ்க்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது.

பல்வேறு சிறு கோயில்கள், பழைமை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மானியமாக வழங்கிய தொகை ரூ. 1,008 கோடி.

இதன்மூலம் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது என்பவா்களின் விமா்சனங்கள் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. திமுகவை விமா்சனம் செய்யும் பாஜக, வலதுசாரி அமைப்பினருக்கு திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேக விழாக்கள் மட்டுமே பதிலாக இருக்கும். தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக தமிழக அரசையும், முதல்வரையும் இறையன்பா்கள் பாராட்டி வருகின்றனா் என்றாா் அமைச்சா் பி.கே. சேகா் பாபு.

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி

கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாய... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். 2004-ஆம்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்

நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை... மேலும் பார்க்க

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா... மேலும் பார்க்க