நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடத்துக்கும், மேல்நிலை, உயா்நிலை, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கும் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தகுதி பெற்ற முதுகலைப்பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் மாதத் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.
இதற்கு தகுதி, விருப்பம் உள்ள பணிநாடுநா்கள் வியாழக்கிழமைக்குள் தங்களது சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பூா்த்தி செய்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகம் அல்லது அரசு ஆதிதிராவிடா் நல பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்கலாம்.