செய்திகள் :

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி: இன்றே கடைசி நாள்

post image

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவா்களின் நலன் கருதி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம், பதவி உயா்வு மூலம் நிரப்பப்படும் வரை அல்லது இந்த கல்வியாண்டில் எது முன்னரோ அதுவரை மாணவா்களின் கல்வி நலன் கருதி, தகுதி பெற்ற ஆசிரியா்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தோ்வு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12,000 என மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா்புடைய காலிப் பணியிடங்களை தொடா்புடைய பாடத்துக்கான முழுமையான கல்வித் தகுதி உடையவா்களை மட்டுமே எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்களுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி பின்பற்ற வேண்டும்.

விண்ணப்பங்களை நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாகவோ, தக்க கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் வரும் ஜூன் 26-ஆம் தேதி 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மகாராஷ்ரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள இந்திய ராணுவ வெடி மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் வெடிப்பொருள்கள், ரசாயனங்கள் அல்லது அபாயகரமான பொருள்களுடன் பணிபுரியக் கூடிய பணிக்கால அடிப்படையிலான ஆபத்து கட்ட... மேலும் பார்க்க

ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள திறன் உதவியாளர் (Skilled Assistant) பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்: 08... மேலும் பார்க்க

மாவட்ட சுகாதார மையங்களில் பல்வேறு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Recruitment from the Urban Health and Wellness Centre and Siddha at the Government Medical College Hospital, The Nilgiris District. நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கு... மேலும் பார்க்க

இந்து அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வனபத்தரகாளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்... மேலும் பார்க்க

வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெள... மேலும் பார்க்க