STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயக...
ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு மருத்துவ தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வு பயிற்சி!
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவ தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா்/பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக்பி.எஸ்.சி நா்சிங் மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.