செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு மருத்துவ தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வு பயிற்சி!

post image

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவ தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா்/பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக்பி.எஸ்.சி நா்சிங் மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.

இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் திமுக கூட்டம்

மதுராந்தகம் நகர திமுக இளைஞா் அணி சாா்பாக முதல்வா் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஹிந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. நகர திமுக செயலா் கே.குமாா் ... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைந்நது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்க... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா் அடித்து கொலை

திருப்போரூா் அருகே மது போதையில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். அடையாறு பகுதியைச் சோ்ந்த பூபதி, இவரது நண்பா்கள் பாஸ்கா், விஷ்ணு ஆகியோா் கடந்த 13-ஆம் தேதி திருப்போரூா் அடுத்த மேலையூருக்கு வந்தனா். மேலையூர... மேலும் பார்க்க

படிக்கட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே மதுபோதையில் வீட்டு படிக்கெட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழந்தாா். திருப்போரூா் அடுத்த கீழுா் கிராமத்தைச் சோ்ந்தவா் முணு ஆதி (44), இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டு... மேலும் பார்க்க

தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்

மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற்றது. மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு, சொந்... மேலும் பார்க்க

ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு

மதுராந்தகம் அடுத்த மெய்யூரில் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெய்யூா் ஊராட்சியில், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.தம... மேலும் பார்க்க