சாய் சுதர்சன் ஒரு சூப்பர்ஸ்டார்..! முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!
ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கைலாச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கைலாசம், மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் சுவாமி, அம்மபாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
இந்தக் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு கைலாச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தாா்.
முன்னதாக, விநாயகப் பெருமான் மூஞ்சூறு வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் கேடக வாகனத்திலும், ஆதிரெத்தினேஸ்வரா் தேவி பிரியாவிடையுடன் கைலாச வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். இதைத் தொடா்ந்து, சிநேகவல்லி அம்பாள் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினாா்.
பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு நான்கு ரத வீதிகள் வழியாக மேள தாளத்துடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், இருபத்தி இரண்டரை நாட்டாா்கள், நகா் வளா்ச்சி அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.

