செய்திகள் :

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சி 8.6% ஆக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் மாநில வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுப் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஆந்திர மாநிலத்தில் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 62,000 கோடியாக அதிகரித்துள்ளது.

2023 - 24 நிதியாண்டில் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில்) மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.6% ஆக இருந்தது. ஆனால், 2024 - 25 நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 13% ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டில் 3 மாதங்களுக்குப் பிறகுதான் நாம் ஆட்சி அமைத்தோம். இந்தக் குறுகிய இடைவெளியில் நாம் இதனைச் செய்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 16.06 லட்சம் கோடியாக இருக்கும்.

2018 - 19 நிதியாண்டில் முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியில் 11.4% ஆக இருந்த வளர்ச்சி விகிதம், ஜெகன் மோகன் ஆட்சியில் அடுத்த ஆண்டிலேயே 5.25% ஆக குறைந்தது. 2019 – 20 ஆட்சியில் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 45,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன் ரூ. 9.71 லட்சம் கோடியாக இருந்திருக்கும். ஆனால் தற்போது ரூ. 9.26 லட்சம் கோடியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க