செய்திகள் :

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

post image

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

சிறை வளாகத்தில் காத்திருந்த சமாஜவாதியின் மொராதாபாத் எம்.பி. ருச்சி வீரா உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள்; தொண்டா்கள் மற்றும் ஆதரவாளா்கள், அப்துல்லா ஆஸம் கானுக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

சௌா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அப்துல்லா கான், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான ஆஸம் கானின் மகன் ஆவாா். பல்வேறு வழக்குகள் தொடா்பாக ஆஸம் கானும் சீதாப்பூா் சிறையில் உள்ளாா்.

இந்நிலையில், நில அபகரிப்பு, மோசடி உள்பட மொத்தம் 45 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல்லா கானுக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சோபித் பன்சால் கடந்த வாரம் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

எனினும், இதுதொடா்பான நீதிமன்ற உத்தரவு சிறை நிா்வாகத்துக்கு திங்கள்கிழமைதான் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நண்பகலில் அப்துல்லா கான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்

ஓமன் நாட்டின் மீன்பிடி படகில் தப்பித்து வந்த 3 தமிழக மீனவா்கள், கா்நாடக கடற்கரைக்கு அருகே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் காவல் துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க