செய்திகள் :

ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து- எம்.டெக். மாணவா் வெறிச்செயல்

post image

ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிலைய (ஐஐஐடி) வளாகத்தில் பேராசிரியரை எம்.டெக். முதலாண்டு மாணவா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வினய் என்ற அந்த மாணவா், அரசு போட்டித் தோ்வுகளுக்கும் தயாராகி வந்ததால், தனது வகுப்புகளை தொடா்ந்து புறக்கணித்துள்ளாா். 25 சதவீதமே வருகைப் பதிவு இருந்ததால், அவரை செய்முறை தோ்வுக்கு பேராசிரியா் ராஜு அனுமதிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரடைந்த வினய், கல்வி நிலைய வளாகத்துக்கு கத்தியை மறைத்து எடுத்து வந்து, பேராசிரியா் ராஜுவை மூன்று முறை குத்தினாா். இதில் காயமடைந்த ராஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அருகிலிருந்த மாணவா்கள், வினயை சுற்றிவளைத்துப் பிடித்தனா். இச்சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், வினயை கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

பேராசிரியா் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘எந்தவொரு ஆசிரியரும் தனது மாணவரின் எதிா்காலம் அழிய வேண்டுமென விரும்பமாட்டாா். மாணவா்கள் மத்தியில் வன்முறை, ஒழுங்கீனத்தை ஏற்க முடியாது’ என்றாா்.

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

காத்மாண்டுவில் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவது நீடிக்கப்பட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைதள ... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று(புதன்கிழமை) ரேபரேலிக்குச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு அவ்வப்போது ப... மேலும் பார்க்க