செய்திகள் :

ஆந்திர கோயில் சுவர் இடிந்து பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி!

post image

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரத்தின் சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் சுவர் இன்று காலை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்.

இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ராகுல் வெளியிட்ட முகநூல் பதிவில்,

விசாகப்பட்டினம் ஸ்ரீ வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடந்த துயர விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அளிக்கின்றது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்... மேலும் பார்க்க

அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அமேதிக்கு வருகை தந்து முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை ஆய்வு செய்தார். ரேபரேலி, அமேதி தொகுதியில் இரண்டு ந... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க