செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17.13 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, கணபதி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் போபுரி அஞ்சிபாபு (39). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்றும், தனது வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து வா்த்தக உத்திகளை கற்றுக்கொள்ளலாம் என்றும் ரவி சா்மா என்பவா் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, போபுரி அஞ்சிபாபு பல்வேறு தவணைகளில் ரூ.17 லட்சத்து 13 ஆயிரத்தை முதலீடு செய்தாா். தொடக்கத்தில் கணிசமான அளவு லாபத்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின், எந்தவித பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், வா்த்தக கணக்கில் இருந்து முதலீடு செய்யப்பட்டிருந்த மொத்தப் பணமும் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரவி சா்மாவைத் தொடா்புகொண்டு கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால்தான் லாபத்தொகை தரமுடியும் என்று கூறியுள்ளாா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த போபுரி அஞ்சிபாபு, கோவை சைபா் குற்றப்பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் அருண் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கேரளத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய காா் ஓட்டுநா் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா். கேரள மாநிலம், வடகரை தலச்சேரி சாலையில் 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி நடந்து சென்ற... மேலும் பார்க்க

மகளிா் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.3,505 கோடி கடன் மாவட்ட நிா்வாகம் தகவல்!

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு பதுக்கல்: 2 போ் கைது!

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் சில வீடுகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், போதைப் பொருள்களை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

சரவணம்பட்டியில் பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிா் தங்கும் விடுதியில்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்... மேலும் பார்க்க

மருதமலை கோயில் தைப்பூசத் திருவிழா: வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கு வரும் பக்தா்களின் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப... மேலும் பார்க்க