செய்திகள் :

ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

post image

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சாஹியில் அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சூர்யகாந்த் சேத்தி(21) கல்லூரியில் படித்துவந்தான். இந்தநிலையில் ஆன்லைன் விளையாட்டில் தினமும் மூழ்கிக்கிடப்பதைக் கண்டு பெற்றோர், சகோதரியும் கண்டித்துள்ளனர். ஆனால் சூர்யகாந்த் அதை நிறுத்தாவதாக இல்லை.

நேற்றிரவு தொடர்ந்து ஆன்லைன் விளையாடில் மூழ்கிய சூர்யகாந்த்தை பெற்றோர் கண்டித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த அவன் அருகிலிருந்த கனமான பொருளைக் கொண்டு தந்தை, தாய், சகோதரியை தாக்கியுள்ளான்.

இதனால் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் சேத்தி என்கிற கலியா (65), அவரது மனைவி கனகலதா (62) மற்றும் மகள் ரோசலின் (25) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு, சூர்யகாந்த் சேத்தி தப்பியோடினார். பின்னர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சூர்யகாந்த் தனது பெற்றோரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

அந்த இளைஞருக்கு மனநலப் பிரச்னை இருக்கின்றதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க