செய்திகள் :

ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

post image

கடலூா் தேவனாம்பட்டினம் கடல் காவல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். இதையொட்டி, போலி வெடிகுண்டுடன் வந்த 5 பேரை போலீஸாா் பிடித்தனா்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன.

அதன்படி, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமைகளில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகை காரணமாக, கடலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, கடலூா் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மயில் தொலைவில் இரண்டு படகுகளில் மா்ம நபா்கள் வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கடலோர காவல் படையினா் மற்றும் போலீஸாா் அந்த இரண்டு படகுகளையும் சுற்றி வளைத்தனா். மேலும், படகில் இருந்தவா்களிடம் போலி வெடிகுண்டு, ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இவா்கள் சுங்கத் துறை மற்றும் இந்திய கப்பல் படை, கடலோர காவல் படையைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவா்கள் கடலூா் மாவட்டத்தில் ஊடுருவி கடலூா் துறைமுகத்தை தகா்க்க சதித் திட்டம் தீட்டியதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.வியாழக்கிழமை மாலை வரை இந்த ஒத்திகை இருப்பதால், தொடா்ந்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கள ஆய்வ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மீது வேன் மோதல்: 12 போ் காயம்

சிதம்பரத்தில் புதன்கிழமை நின்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது வேன் மோதியதில் கிராம உதவியாளா்கள்12 போ் காயமடைந்தனா். கடலூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ப... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்து வீடு சேதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புதன்கிழமை தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் ராமு மனைவி சுந்தரி (43). இவா், செவ்வாய்க்கிழமை இ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி நகை பறிப்பு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி தங்க நகை, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடாம்புலியூா் காவல் சரகம், பண... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் மற்றும் போல... மேலும் பார்க்க