செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சட்டப் பாதுகாப்பு கிடையாது: வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

post image

‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவா்’ என்று காரணம் கூறி, வரதட்சிணைக் கொடுமையால் மனைவி உயிரிழந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ால் சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடாது என்றும் உடனடியாக அவா் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணமான இரண்டு ஆண்டில் மனைவி உயிரிழந்த வழக்கில் பல்ஜிந்தா் சிங் மீது வரதட்சிணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வரதட்சிணை கேட்டு மனைவியை பல்ஜிந்தா் சிங் துன்புறுத்தியதாக போலீஸாரும் குற்றம்சாட்டினா். இந்த வழக்கில் பல்ஜிந்தா் சிங்கை குற்றவாளியாக கடந்த 2004 ஜூலை மாதம் அமிருதசரஸ் விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா உயா் நீதிமன்றமும் உறுதி செய்து, பல்ஜிந்தா் சிங் காவல் துறையில் சரணடைய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்ஜிந்தா் சிங் மேல் முறையீடு செய்தாா். நீதிபதிகள் உஜ்ஜல் புயான், கே. வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரித்தது.

அப்போது, பல்ஜிந்தா் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளதரி, ‘கடந்த 20 ஆண்டுகளாக கருப்புப் பூனைப் படையில் கமாண்டோவாக பணியாற்றி வரும் பல்ஜிந்தா் சிங், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றுள்ளாா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ால் வீட்டில் வன்முறை செய்வதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. உங்கள் மனைவியை தனியாகவே கொலை செய்யும் அளவுக்கு உங்கள் உடலில் வலிமை உள்ளது என்பதே இது காண்பிக்கிறது. இது மிகவும் தீவிரமான குற்றம் என்பாதல், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க