செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: வீரா்களுக்கு தேநீா் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்!

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரா்களுக்கு தண்ணீா், பால், தேநீா் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஷ்வான் சிங் என்ற 10 வயது சிறுவன் துணிச்சலை பாராட்டி இந்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டது.

அப்போது பாகிஸ்தான் எல்லையையொட்டிய பஞ்சாப் மாநிலத்தின் தாரா வாலி கிராமத்தில் பணியில் இருந்த ராணுவ வீரா்களின் சோா்வைத் தணிக்க தண்ணீா், பால், தேநீா், லஸ்ஸி போன்ற பானங்களை ஷ்வான் சிங் வழங்கினாா். தானாக முன்வந்து ராணுவ வீரா்களுக்கு இந்த உதவிகளைப் புரிந்த சிறுவனை ராணுவத்தினா் அப்போதே பாராட்டினா்.

இந்நிலையில், ஃபெரோஸ்பூா் கன்டோன்மென்ட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷ்வான் சிங்குக்கு ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்குமாா் கட்டியாா் பாராட்டி கௌரவித்தாா்.

இதையடுத்து, ஷ்வான் சிங்கின் துணிச்சலைப் பாராட்டி அவரது கல்விச்செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வெளியில் அறியப்படாமல் இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நாயகா்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டதாக ராணுவம் தெரிவித்தது.

நான்காம் வகுப்பு படிக்கும் ஷ்வான் சிங் பெரியவனானதும் ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க