செய்திகள் :

ஆமதாபாத்தில் மோடி! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

post image

ஆமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் இருந்த 7 மாணவர்கள் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஆமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன், மாநில உள்துறை அமைச்சர் ஷர்ஷ் சங்கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, விமான விபத்து நடைபெற்றவுடன் தில்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர், உடனடியாக சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகனையும் அனுப்பிவைத்தார்.

இதையும் படிக்க : விபத்துக்கான காரணங்கள்?: விமானத் துறை நிபுணா்கள்

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா

வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பாலகாட் காவல் க... மேலும் பார்க்க

கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது. நாடெங்கிலும் பைக் டாக்ஸ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! களத்தில் பிரிட்டன் விசாரணைக் குழு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில் பிரிட்டன் நாட்டு விசாரணைக் குழுவும் இடம்பெறுவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 245 பேர் ... மேலும் பார்க்க