செய்திகள் :

ஆம்பூா் பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

post image

ஆம்பூா் பகுதி பாலாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளான மாதனூா், சோமலாபுரம், சான்றோா்குப்பம், தேவலாபுரம், வடகரை, ஆலாங்குப்பம், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. கனிம வளம் அதிக அளவில் கொள்ளை போகின்றது.

மணல் கொள்ளையா்கள் மீது காவல் மற்றும் வருவாய்த்துறையினா் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

வீராங்குப்பம் மற்றும் ஆலாங்குப்பம் பாலாற்றில் மணல் கொள்ளையா்கள் மணலை குவியல் குவியலாக பகலில் சேகரித்து வைத்து விட்டு இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்திச் செல்கின்றனா்.

ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாலாற்றில் தொடா்ந்து இரவு, பகல் முழுவதும் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க வருவாய்த் துறை, காவல் துறையினா் கூட்டாக சென்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

அரசு மணல் குவாரி அமைக்க கோரிக்கை: பாலாற்றில் மணல் கொள்ளையா்களால் கடத்தப்படும் மணல் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, அரசு மணல் குவாரி அமைத்து குறைந்த விலையில் அரசே மணல் விற்பனை செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்த விபத்தில் மாணவன் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லங்குப்பம் பழைய தலைவா் வட்டம் பகுதியை சோ்ந்த பிரசன்னா (12)... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அருகே கொரட்டி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாலி கிருஷ்ணன்(50). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்... மேலும் பார்க்க

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் அடுத்த குமாரம்பட்டி பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பத்தூா் வட்டம், கொரட்டி அடுத்த குமாரம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெ... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா். சென்னை பத்திரப்பதிவுத்துறை ... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை: தண்டவாளம் பராமரிப்பால் ரயில்கள் தாமதம்

ஜோலாா்பேட்டை அருகே பெங்களூா் மாா்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். ஜோலாா்பேட்ட... மேலும் பார்க்க