இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
தொழிலாளி தற்கொலை
திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே கொரட்டி கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாலி கிருஷ்ணன்(50). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில், சில நாள்களாக விரக்தியில் இருந்த கிருஷ்ணன் சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாா்.
அப்போது அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்த பாா்த்தபோது கிருஷ்ணன் உடல் முழுவதும் தீக்காயத்துடன் காயமடைந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.