செய்திகள் :

ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக

post image

பஞ்சாப் விரைவில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து விடுதலை பெறும் என பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகத் தளமான ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில்,

பஞ்சாப் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மக்களும், எம்எல்ஏக்களும் ஆம் ஆத்மியிடம் இருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். அதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பஞ்சாப் விரைவில் அவர்களிடமிருந்து விடுதலை பெறும் என்று நம்புகிறேன்.

முன்னதாக, முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான மாநிலத்தில் சிக்கல்கள் நிலவி வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக சமீபத்திய தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கேஜரிவால் தோல்வியடைந்தப் பிறகு அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை கேஜரிவாலை சந்தித்தனர். சிலர் பஞ்சாபை "தங்கள் தனிப்பட்ட ஏடிஎம்" என்று கருதுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஸ்வாதி மாலிவால் கடுமையாகச் சாடினார்.

தில்லியில் அரவிந்த் கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் சந்திப்பு குறித்துப் பேசிய மாலிவால், பஞ்சாப் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மீது கோபம் இருப்பதாக அவர் கூறினார்.

தில்லியில் தோல்வியடைந்ததால் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபிற்கு குடிபெயர விரும்புகிறார். கேஜரிவால் பஞ்சாபிற்கு வருவது குறித்து பஞ்சாப் எம்எல்ஏக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டது, எனவே கேஜரிவால் பஞ்சாப் எம்எல்ஏக்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.

பஞ்சாப் அரவிந்த் கேஜவாலுக்கு ஆட்சி அதிகாரம் அளித்தபோது, ​​அவர் பஞ்சாபிற்கு என்ன செய்தார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்

கேரளத்தில் அரசு கல்லூரியில் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைப்படுத்துதலுக்குள்படுத்தப்பட்டுள்ளது பற்றி அக்கல்லூரியின் முதல்வர் விளக்கமளித்துள்ளார். கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில்... மேலும் பார்க்க

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்துள்ளது.மேலும், அமெரிக்க பயங்கரவாதிகள் இந... மேலும் பார்க்க

சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!

அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறித் தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள மாவட்ட ... மேலும் பார்க்க

மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!

மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப... மேலும் பார்க்க

இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள்... மேலும் பார்க்க