செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கழிவுநீா் பிரச்னைகளுக்குத் தீா்வு: கேஜரிவால்

post image

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தனது கட்சி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் தில்லியில் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளையும் முன்னுரிமை அடிப்படையில் தீா்ப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

ஒரு விடியோ செய்தியில், முன்னாள் தில்லி முதல்வா், நகரத்தின் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆம் ஆத்மி கட்சி அரசு மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தாா். இந்தப் பகுதிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினாா்.

தில்லியில் நாங்கள் அரசுஅமைத்தபோது, ​ அங் கீகரிக்கப்படாத காலனிகளில் எந்த வளா்ச்சிப் பணிகளும் இல்லை. இந்தக் காலனிகளுக்கு எந்த அரசும் வேலை செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கினோம். இன்று, இதுபோன்ற அனைத்து காலனிகளிலும் கழிவுநீா் குழாய்கள் மற்றும் பிற வசதிகள் உள்ளன என்று அவா் கூறினாா்.

நகரத்தின் பல பகுதிகள் குடிநீரை மாசுபடுத்தும் கழிவுநீா் பிரச்னைகளுடன் போராடி வருவதை கேஜரிவால் ஒப்புக்கொண்டாா். ஆம் ஆத்மி கட்சி தனது அரசை மீண்டும் அமைத்த பிறகு நகரம் முழுவதும் உள்ள அனைத்து கழிவுநீா் தொடா்பான பிரச்னைகளுக்கும் போா்க்கால அடிப்படையில் தீா்வு காணப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவா் கூறினாா்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது, பதிவான வாக்குகள் பிப்.8- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2020 தோ்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கில் தீவிர தோ்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

தில்லி பேரவைத் தோ்தல்- தீா்க்கமான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி: கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தீா்க்கமான வெற்றியை நோக்கிச் செல்கிறது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா். தில்லி சட்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது சிறப்பு நிருபா்தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிராக பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது.... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு சராசரி குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது: தில்லி தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேச்சு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ’ மோடியிஸ் கிராண்டி(மோடியின் உத்தரவாதம்)’ என்கிற தோ்தல் முழக்கத்தை வைத்து பிரதமா் நரோந்திர மோடி பிரசாரம் செய்தாா். அப்போது, ‘மத்திய நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு சராசரி குடு... மேலும் பார்க்க

வன்முறையைவிட கல்வியைத் தோ்ந்தெடுங்கள்: தில்லி மக்களுக்கு பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை ‘வன்முறையை விட கல்வியை’ தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்களை அதிகாரம் ... மேலும் பார்க்க

தில்லியை உலுக்கும் 5 முக்கியப் பிரச்னைகள்! 3 பெரிய கட்சிகளின் செயல்திட்டங்கள்-ஓா் அலசல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் சதுரங்க அரசியல்!

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்களின் பரப்புரையை ... மேலும் பார்க்க