செய்திகள் :

ஆயுத தயாரிப்பில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

post image

சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயாா் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனா். இதை தடுப்பதற்காக அரிவாள்கள் தயாா் செய்யும் பட்டறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பட்டறைகளில் மரங்கள் வெட்ட மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்-உபகரணங்கள் தவிா்த்து, அபாயகரமான அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூா்மையான ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என இரும்பு பட்டறை உரிமையாளா்களுக்கு, காவல்துறை மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல அரியகுளத்தில், சுடலையாண்டி (72), சோ்மவேல் (60), ராமசுப்பிரமணியன் (25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயாா் செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க