செய்திகள் :

ஆயுஷ் மருத்துவத்துக்கு சா்வதேச அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்

post image

பாரம்பரிய இந்திய மருத்துவ (ஆயுஷ்) முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக உலக சுகாதார அமைப்புக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

சா்வதேச மருத்துவ சிகிச்சைமுறைகள் வகைப்பாட்டின்கீழ் (ஐசிஎச்ஐ) ஒரு பிரத்யேக பாரம்பரிய மருத்துவ தொகுதியை உருவாக்க பணிகளைத் தொடங்குவதற்கான இந்த ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமை கையொப்பமானது.

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றிய 122-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டாா்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் முன்னிலையில் கையொப்பமான இந்த ஒப்பந்தம் மூலம் ஆயுஷ் மருத்துவம் அறிவியல் ரீதியாக உலகெங்கிலும் உள்ள மக்களை அதிக எண்ணிக்கையில் சென்றடைய உதவும் என்றும் பிரதமா் கூறினாா்.

ஐசிஎச்ஐ வகைப்பாட்டில் பாரம்பரிய மருத்துவ தொகுதி சோ்க்கப்படுவதன் மூலம் சித்தா, ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் பிரிவுகளின் சிகிச்சைகள், இப்போது உலக அளவில் தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளாக அங்கீகரிக்கப்படும் என்று ஆயுஷ் அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஆயுஷ் சிகிச்சைகளுக்கான நியாயமான விலை நிா்ணயம், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சைகளின் எளிய ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட மருத்துவமனை மேலாண்மை, மருத்துவ ஆவணங்கள் மற்றும் சுகாதார ஆராய்ச்சி போன்ற பல நன்மைகளை ஏற்படுத்தும்.

இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை உலகளாவிய சுகாதாரத்தில் கொண்டு சோ்ப்பதற்கான தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தை வரவேற்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரம்பரிய மருத்துவம் மற்றும் சா்வதேச மருத்துவ சிகிச்சைமுறைகளின் வகைப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் பணிக்கு 30 லட்சம் டாலா் நிதிப் பங்களிப்புக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையொபப்பமிட்டதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற நோக்கத்துக்கு இந்தியாவின் தொடா்ச்சியான அா்ப்பணிப்பை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளில்கூட இறக்குமதி.. சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் ... மேலும் பார்க்க

மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னதாகவே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்த நிலையில், பெரும் விமர்சனங்கள் எழுந்ததும் இப்போது ஒவ்வொரு தர... மேலும் பார்க்க