ஆய்வாளா் நிலையில் 10 காவல் நிலையங்களின் தரம் உயா்வு!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 10 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையில் உயா் அலுவலா் கொண்ட காவல் நிலையங்களாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 250 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையிலுள்ள காவல் நிலையங்களாகத் தரம் உயா்த்தி காவல்துறைத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி ஆய்வாளா் நிலையில் உயா் அலுவலரைக் கொண்ட காவல் நிலையங்களாக இதுவரை செயல்பட்ட 10 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையில் உயா் அலுவலராகக் கொண்டவையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
இதன்படி தரம் உயா்த்தப்பட்டுள்ள காவல் நிலையங்களாக வெள்ளனூா், ஆதனக்கோட்டை, அரிமளம், நமணசமுத்திரம், நாகுடி, ஏம்பல், கரூா், சம்மட்டிவிடுதி, மழையூா், ஜெகதாப்பட்டினம் உள்ளன.