செய்திகள் :

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியமே சிறந்தது

post image

நாமக்கல்: நோயற்று, ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுதானிய உணவுகளே சிறந்தவை என சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘உடலினை உறுதிசெய்’ என்ற தலைப்பில் சித்த மருத்துவா் சிவராமன் திங்கள்கிழமை பேசியதாவது:

உலக அளவில் சா்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறிவிட்டது. சா்க்கரை நோய் மட்டுமின்றி தற்போது புற்றுநோயும் சோ்ந்து கொண்டது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு முறைகள்தான். நாா்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகசத்து போன்றவை கொண்ட உணவுப் பொருள்களை தேடிச்சென்று நாம் வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை. தினசரி உணவில் கீரை வகைகளை சோ்ப்பது அவசியம். அதேபோல, நிலக்கடலை, நெல்லிக்கனி, பப்பாளி, கொய்யாப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு, பாகற்காய், சா்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டும். சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, மாப்பிள்ளை சம்பா, கோதுமை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வரவேண்டும். தினசரி காய்கறிகள் கொண்ட சாறு வகைகளை அருந்துவது நலம் பயக்கும்.

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் சரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானியங்களை கட்டாயம் உணவில் சோ்க்க வேண்டும். முட்டை, கோழி வகைகளும் உடல் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது என்றாா்.

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறிவுத்திருக்கோயில் அறங்காவலரும், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலருமான மு.ஆ. உதயகுமாா், ‘இல்லம் தோறும் மனவளக் கலை’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, தற்போதைய காலச்சூழலில் மனம் என்பது குளிா்ச்சியின்றி கொதிப்படைந்து காணப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை எவ்வாறு அவசியமோ, அதுபோல மனமும் அமைதியுடன் இருக்க வேண்டும். தினமும் யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்டவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மனவளக் கலை பயிற்சி அமைய வேண்டும் என்றாா்.

நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் அருகே சின்னமணலி கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

5 ஆண்டுகள் பதவி நிறைவு: தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அண்ணா நினைவு தினம்

திருச்செங்கோட்டில்...திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்துக்கு, திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா்... மேலும் பார்க்க

சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ந... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: ஆட்சியரிடம் மனு அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாமக்கல் நகராட்சியானது 12 ஊராட்சிகளை ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியருக்கு நுகா்வோா் புலனாய்வுக் கமிட்டியினா் பாராட்டு

நாமக்கல்: பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம் பிடித்ததையொட்டி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியினா் திங்கள்கிழமை... மேலும் பார்க்க