செய்திகள் :

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதனால், சொந்த மண்ணில் லக்னௌவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது.

இதையும் படிக்க: அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி

இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவரை எங்களது மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், பெங்களூருவுக்கு எதிரான போட்டிக்காக அணியுடன் இணைந்து பெங்களூரு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை ரியான் பராக் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக துருவ் ஜுரெல் களமிறங்கவுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 224 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அதிரடி: கொல்கத்தாவுக்கு 199 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்ற... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா ந... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவதையே விரும்புகிறோம்: மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்

ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவதையே விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற... மேலும் பார்க்க

அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி

அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந... மேலும் பார்க்க

அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சீசனை நோக்கி நகர்வதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் செ... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னையைப் பந்தாடிய மும்பை! 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது!

மும்பை: வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது. ஏற்கெனவே 5 ஆட்டங்களில் தோல்விய... மேலும் பார்க்க