செய்திகள் :

ஆற்காடு கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

post image

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்லூரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, எஸ்எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.என்.சரவணன். ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, பள்ளி முதல்வா் எழிலரசி வரவேற்றாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில் புதுபானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் காய்கனிகளுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடா்ந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பண்டிகைகள் கொண்டாட்டமா, திண்டாட்டமா என்ற தலைப்பில், வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் முகமது அலி ஜின்னா நடுவராக கொண்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் கே.வி.சிவக்குமாா், விரிவுரையாளா்கள், பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சமத்துவப் பொங்கல் விழா: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா். பொறியாளா்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்: வெளிநாட்டினா் பங்கேற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா். ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்ற பாமக பொதுக்குழுவில் முடிவு

அனைத்துக் கிளைகளிலும் கிராம கூட்டம் நடத்தி கொடியேற்றுவது என்று பாமக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

சோளிங்கரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலை அகற்றம்

சோளிங்கரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 9 அடி உயர பெருமாள் சிலையை இந்து சமய அறநிலையத்துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் உள்பட 17 ... மேலும் பார்க்க