செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

post image

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் சீமான் பேசுகையில், அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.

இதன் மூலம், நிகிதாவின் மோசடிப் பணத்தில் பங்களிக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது. இப்போதும்கூட அவரை விசாரிக்காதது ஏன்?

உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட போலீஸாரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் உயர் அதிகாரிகள் யார்? என்ற விசாரணையும் இல்லை.

மனித உரிமையை மீறி விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது யார்? போராட்டத்துக்கு நெறிமுறைகள் பேசும் போலீஸார், அவர்களும் அதனைக் கடைபிடித்திருந்தால் அஜித்குமார் இறந்திருக்க மாட்டார்.

சிபிஐ விசாரணையை முதல்வர் கோருகிறார். ஆனால், யார் கட்டுப்பாட்டின்கீழ் காவல்துறை செயல்படுகிறது? யாரின் துறை அது? உங்கள் போலீஸார் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

எப்படி நடந்தது என தெரியாமல் இருந்தால்தான் விசாரணை வேண்டும். ஆனால், குற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. உத்தரவு பிறப்பித்தவர்கள் மீதுதான் நடவடிக்கை வேண்டும். இதில் விசாரணை மேற்கொள்ள அவசியமென்ன?

ஏமாற்றுவதற்காகத்தான் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட எத்தனை வழக்குகளில் நீதி வழங்கப்பட்டுள்ளது? சிபிசிஐடி-யிலிருந்து விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியதே ஏமாற்றத்தான்.

கள்ளச்சாராயம் குடித்து பலியானால் ரூ.10 லட்சம் வழங்கும் அரசு, போலீஸாரால் அடித்து படுகொலை செய்யப்படுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்து, நிதி இல்லை எனக் கூறுவது நியாயமா?

அஜித்குமாரை அடித்துக் கொல்லும் அளவுக்கு நெருக்கடி அளித்த அந்த உயர் அதிகாரி யார்? அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேரம் பேசியதன் மூலம் யார் குற்றவாளி என்பது தெரியவில்லையா?

இந்தக் கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்கிறதா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பித்தது யார்? கோடநாட்டில் இறந்தவர் யார் என்பது தெரிகிறது; கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க