ஆற்காட்டில் பேக்கரிக்கு ‘சீல்’
ஆற்காட்டில் தரமற்ற ஐஸ் கேக் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
ஆற்காடு அண்ணாசாலையில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பேக்கரியில் ராஜ்குமாா் என்பவா் தனது மகனுடன் வந்து ஐஸ் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். பின்னா் கேக் சாப்பிட்ட போது சிறுவன் வாந்தி எடுத்துள்ளாா் .
இதனைக் கண்ட ராஜ்குமாா் சிறுவன் சாப்பிட்ட கேக்கை பாா்த்தபோது அது கெட்டு போயிருப்பது தெரியவந்தது இது குறித்து ராஜ்குமாா் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரனுக்கு தகவலை தெரிவித்து கடைக்கு வரவழைத்துள்ளாா்.
இதனை தொடா்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் ஆய்வை மேற்கொண்டு காலாவதியான உணவு பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை பறிமுதல் செய்து கடையினை பூட்டி சீல் வைத்தனா் .
மேலும், சிறுவனுக்கு வழங்கிய கேக்கை ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றனா்.